என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 22 September 2012

திருநங்கைகள் பிச்சை எடுப்பது பற்றி....?


எல்லா சமூக தளங்களிலும் பிச்சை எடுப்பது ஒரு இழிவான செயலாகத்தான் கருதப் படுகிறது. ஆனால் பிச்சை எடுப்போர் யாரும் அதை விருப்பட்டோ, இல்லை மாற்று செயலாகவோ கருதி செய்வதில்லை. பிச்சை எடுப்பதில் முதல் பாலினத்தையும், இரண்டாம் பாலினத்தையும் ஏற்று கொள்ள முடிந்த நம் சமுகத்தால், மூன்றாம் பாலினமாகிய திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். திருநங்கையாகிய "Living Smile" வித்யா எழுதிய "நான் வித்யா" பதிவு செய்திருந்த சில வரிகள் " பெண்களிலும் ஒடுக்கப் பட்ட பெண்களாக, தலித்துகளிலும் அடிமை படுத்தப்பட்ட தலித்துகளாக, சிறுபான்மையினரிலும் ஆகச் சிறுபான்மையினரான திருநங்கைகள் மட்டும் எவ்வித சமூக அங்கீகாரம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாய் இருக்கிறது. வயிறு என்று ஒன்று இல்லது போனால் எந்த திருநங்கையும் இங்கே விபச்சாரம் செய்ய மாட்டாள்; பிச்சை எடுக்க மாட்டாள்." இறுதியாக "சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னை போன்ற பிற திருநங்கைகளுக்காகவும். புரிந்து கொள்விர்களா? எனில், நன்றி"
பின் குறிப்பு: தற்போது வித்யா அவர்கள் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

Monday, 17 September 2012

குரைப்பின் மொழி

என்றோ படித்த எனக்கு பிடித்த கவிதை
தலைப்பு : குரைப்பின் மொழி
வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்

தனியே விட்டு 
ஊர் போய் திரும்பினால்
தவிப்பை 
வேறொரு குரல்

பேப்பர் போட
வருபவர்க்கு ஒருவிதம்

கொய்யா மரத்தில் 
அணிலும் காக்கையும் 
விரட்டி பிடிக்க முடியாக் 
கோபத்தில் ஒருவிதம்

மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு 
தொடர் குரைப்பு

மாதமொருமுறை வரும் 
சிலிண்டர்க்கு 
பயத்தோடு ஒரு குரைப்பு

ஒரேலுத்துக் கூடினாலும் 
பால்காரர்க்கும் தபால்காரர்க்கும் 
வெவேறு விதம்

பாம்புக்கு வன்குரல் 

சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கம் 
வெவ்வேறு தொனிகளில்

குட்டிகளுடன் 
விளையாடுகையில் 
செல்லமாய் ஒரு குரல்

யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில் குரைப்பை 
சில நேரம்

எதுவுமில்லா அலுபுட்டும் 
பொழுதுகளில் 
ஆயாசமாய் ஒருகுரல்

திடுக்கிடும் கனவுகள் 
கலைகையில் 
குழப்பமாய் ஒரு குரல்

எஜமான் 
இறந்து போனால் 
தேற்ற முடியாத 
உயிரின் துயரம் 
சொட்டும் குரலென 

நாயின் குரல்
நாற்பது விதம்
என் கவிதைகளுக்குக் 
கூட இல்லை 
இத்தனை விதம்
@@@நன்றி விகடன் 

கோடை கால கானகம்

மிக அறிதானொரு 
சந்தர்பத்தில்
உன் விரல்களின் 
ஸ்பரிசம் எனது
வலது கரதிற்க்குள்....

கோடைகால
கானகத்திற்குள் 
தவறி விழுந்த 
தீ கங்காய்
தீண்டியது 
உனது காதல்..

கடந்து செல்
என்கிறாய் ஒருமையில்!!!!

காதலற்ற தருணங்களையும் 
காதலற்ற மனிதர்களையும் 
ஏற்றுக் கொள்ள 
முடிந்த உன்னால் 

ஒட்டு மொத்த
வாழ்க்கைக்கும் சேர்த்து 
காதலை 
சுமந்து வரும் 
என்னை
கடந்து செல்கிறாய் 
சாதாரண வழிப்போக்கனைப் போல் ...!!!!!

வழிப்போக்கன் வார்த்தை 22

நம்மை விட நம் அம்மாவிடம் அதிக உரிமையாக பேசும் நண்பனை பார்க்கையில், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது {போட்டு கொடுத்துருவனோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும்}. நண்பேண்ட!!!!

Monday, 10 September 2012

வழிப்போக்கன் வார்த்தை 21 :

தர்மம் என்பது என்ன?
ஒரு காரின் (TN 76 4174)  பின் பக்க கண்ணாடியில் கண்ட வாசகம் " தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"

வழிப்போக்கன் வார்த்தை 20 :

உலகிலையே மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் "வாடகை வீட்டில் குடியிருப்போர்களே"