என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 17 September 2012

கோடை கால கானகம்

மிக அறிதானொரு 
சந்தர்பத்தில்
உன் விரல்களின் 
ஸ்பரிசம் எனது
வலது கரதிற்க்குள்....

கோடைகால
கானகத்திற்குள் 
தவறி விழுந்த 
தீ கங்காய்
தீண்டியது 
உனது காதல்..

கடந்து செல்
என்கிறாய் ஒருமையில்!!!!

காதலற்ற தருணங்களையும் 
காதலற்ற மனிதர்களையும் 
ஏற்றுக் கொள்ள 
முடிந்த உன்னால் 

ஒட்டு மொத்த
வாழ்க்கைக்கும் சேர்த்து 
காதலை 
சுமந்து வரும் 
என்னை
கடந்து செல்கிறாய் 
சாதாரண வழிப்போக்கனைப் போல் ...!!!!!

No comments:

Post a Comment