ஜென்னி மார்க்கஸ். வசதியான குடும்பத்தில் பிறந்து, கார்ல் மார்க்ஸ்யை திருமணம் செய்து எராளமான துயரங்களை சந்தித்தவர். வறுமையின் காரணமாக, அடுத்தடுத்து தான் குழந்தைகளைப் பறிகொடுத்தார். கார்ல் மார்க்ஸ்சின் நடவடிக்கைகளுக்காக belgeium அரசாங்கத்தால் " விபசார வழக்கில்" கைது செயப்பட்டார் ஜென்னி . மார்க்ஸ்சின் தோழர்கள் சிறையை முற்றுக்கையிட்டு கோஷம் எழுப்பினர். பிறகு, நீதிமன்றத்தில் ஜென்னி நிறுத்தப்பட்டபொழுது, "ஏன் குழந்தைகளை கைது செய்ய வில்லை " என்று போலீசை கண்டித்தார் நீதிபதி. கார்ல் மார்க்ஸ் பல தடவை நாட்டை விட்டு துரத்தப் பட்ட பொழுது, சொல்லமுடியாத துயரங்களை சந்தித்தார். லண்டனில் அழுத தான் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் ஜென்னியின் மார்புகளில் ரதம் வழிந்தது. பால் இன்றி இறந்து போன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இல்லை. "குழந்தை பிறந்த பொழுது தொட்டில் வாங்க காசு இல்லை; அவன் இறந்த பொழுது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை" என்னும் ஜென்னியின் புகழ் பெற்ற கடித வரிகளில் இப்பொழுதும் ரதம் கொட்டும். வரலாற்றிலும், இலக்கியங்களிலும் லைலா, அமர்வது, ஜூலிஎட் என்று ஏராளமான காதலிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் காதலையும், காதலனையும் மட்டுமே நேசித்தார்கள். ஆனால், ஜென்னி மட்டும்தான் தான் காதலனின் லட்சியங்களையும், அதற்காக கொடுக்கப்பட்ட விலைகளையும் நேசித்தவர். மார்க்ஸ்யை பிரியும்பொழுது வழக்கமாக ஜென்னி சொல்லும் வார்த்தைகள் இவை....
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .
என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)
- தில்லைகனி
- காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.
Monday, 29 August 2011
உலகின் மிகச் சிறந்த காதலி
Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment