என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Friday, 26 August 2011

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள்

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள் எவை என்ற கேள்விக்கு தனக்கு விருப்பமான பட்டியலை எஸ். ராமகிருஷ்ணன் தந்துள்ளார்.
1) தி. ஜானகிராமன் - மேகமுள்
2) ஜெயகாந்தன் - ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
3)கி-ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4) ப. சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5) ஜி.நாகராஜன் - நாளை மற்றும் ஒரு நாளே
6) சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7) அசோகமித்திரன் - ஒற்றன்
8) கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9) வண்ண நிலவன் - கடல் புரத்தில்
10) எஸ்.சம்பத் - இடைவெளி
இந்த பட்டியலில் சாரு நிவேதிதாவின் ஒரு புத்தகம் கூட இல்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.
சாருவின் ஸீரோ டிகிரி நாவலை கலிஃபோர்னியா ஸ்டேட் யூனிவர்ஸிட்டியில் modern asian classics பிரிவில் சேர்த்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் அதே நாவல் முதுநிலைப் பாடத் திட்டத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மைலேயே, சாரு தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரம். சாருவின் படைப்பை விட்டுவிட்டு தமிழகத்தின் டாப் டென் புதினங்கள் இருக்குமென்றால் , உப்பற்ற சமையலைப் போலத்தான் அந்த பட்டியல் இருக்கும்.
 
நன்றி அனந்த விகடன்

No comments:

Post a Comment