என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 22 August 2011

உத்திரவாதம்

புறந்தள்ளிய உறவுகளை
மீண்டும் அரவணைக்கையில்
                        கண்களோடு
                        மடிந்து விடக் கூடிய கண்ணிரையோ,
                        மஞ்சள் தடவிய
                        பத்திரிகையையோ,
                        மெலிதான கைகுலுக்கலையோ,
                        சுவாரசியம்மற்ற பரிசுப்பொருளையோ,
                        உடல் நலம் குறித்த
                        விசாரணைகளையோ,
                        வரிகளற்ற குறுஞ்செய்திகளையோ
பரிமாறிக் கொள்கிறோம்.
ஆனால்,
"மீண்டும் புறக்கணிக்கப் போவதில்லை"
என்கிற
உத்திரவாதத்தை
மட்டும்
வேண்டுமென்றே தர மறுக்கிறோம்!!!

No comments:

Post a Comment