"என்னிடம்
என்ன பிடித்திருக்கிறது?"
என்று கேட்கிறாய்
மல்லிகை பூவிற்கு
மட்டும்
பாரபட்சம் காட்டும்
உன் கூந்தலை சொல்லவா?
வெட்கத்தை முகசுழிப்பில்
முற்றுக்கையிட்டு
கண்களால்
பதிலை சொல்லும்
தந்திரத்தை சொல்லவா?
"என் மீது
காதலை வைத்து
நீ
ஏமாந்து போனால்,
அதை தாங்கி
கொள்ளும் பக்குவம்
எனக்கில்லை"
என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சொல்லவா?
யாரும் தன்னை
தவறாக பார்த்து விடக் கூடாது
என்ற படபடப்பில்
மார்பு கச்சையை
சரி செய்யும்
விரல்களின் தோரனையை சொல்லவா?
பொயென்று தெரிந்தும்
என் கவிதைகளுக்கு
தரச் சான்றிதழ்
அளிக்கும் பெருந்தன்மையை சொல்லவா?
காரணங்களை தேடாதே
என்னை
காதலிக்க மட்டும் செய்!!!!!
No comments:
Post a Comment