என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 23 April 2011

ரசனையின் கசிவு 2


பொறாமை
உன்னை விட்டு
விலகி நடக்கையில் 
சாரலாய் இருந்த 
மழைத்துளி,
உன்னோடு 
கை கோர்த்து
நடக்கையில் 
புயலாக மாறுகிறது!!!!!
வருனபகவானுக்கும் 
உன் மீது காதலோ????
********************************
கண்ணீர்த்துளி 
உன்னை 
மறக்க நினைத்து 
கண்களை 
மூடினேன் 
கண்ணீர் துளியாய்
உனது இருப்பை 
வெளிப்படுத்தி கொண்டுருந்தாய்!!

No comments:

Post a Comment