பொறாமை
உன்னை விட்டுவிலகி நடக்கையில்
சாரலாய் இருந்த
மழைத்துளி,
உன்னோடு
கை கோர்த்து
நடக்கையில்
புயலாக மாறுகிறது!!!!!
வருனபகவானுக்கும்
உன் மீது காதலோ????
********************************
********************************
கண்ணீர்த்துளி
உன்னை
மறக்க நினைத்து
கண்களை
மூடினேன்
கண்ணீர் துளியாய்
உனது இருப்பை
வெளிப்படுத்தி கொண்டுருந்தாய்!!
No comments:
Post a Comment