என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 8 March 2011

புத்தக வாசிப்பு

புத்தக வாசிப்பு என்பது ஒருவனை சிறந்த சிந்தனையலானாக மாற்றும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இன்று புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்த தேடலாக யாரும் நினைப்பதில்லை. மாற்றாக அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்று தேடுகிறார்கள். ஏனோ நமது வாசிப்பின் தரம் சமுகத்தில் கீழ் மட்டத்திற்கு சென்று விட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு பயணத்தின் பொது நமது கைகளில் இடம் பெற்றிருந்த புத்தகம் இன்று கைப்பேசிகளாக மாறி விட்டது. 
இன்றிய தேதியில் புத்தக காட்சிகளில் அதிகம் விற்பனை ஆவது சமையல் குறிப்பும், தன்னம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. ஒரு முறை புத்தக காட்சியில் கல்லா பெட்டியில் அமர்திருந்த ஒருவரிடம், " ஐயா சாரு நிவேதிதா, பாமரன், அழகிய பெரியவன், அசோகமித்திரன் புத்தகங்கள் இருக்கிறதா?" என்று கேட்டேன். ஏதோ வேற்று கிரக வாசியய் போல் என்னை பார்த்து விட்டு, மீண்டும் தன வேலையை செய்ய தொடங்கி விட்டார். (அப்படி என்ன சாமி நான் தப்பா கேட்டுட்டேன்).

வாசிப்பின் தரம் குறைத்ததற்கு யார் காரணம்?...... கற்பனையல்லாத அடிப்படை கல்வி, ரசனை இல்லாத குடும்பம், எதையும் நுனிப்புல் மேயும் புத்தி இதுவே வாசிபிர்க்கான பெரிய தடை. சிறு வயது முதலே அனைவருக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது அடுத்த தலை முறையின் வாழ்க்கை தரம் நன்றாக இருக்கும். 

No comments:

Post a Comment